சலவாத்து ஓதுவதின் மகிமைகள் சலவாத்து ஓதுவதால் மனிதர்கள் அடையும் பாக்கியங்களைப் பற்றி அல்லாமா ஸகாவீ (ரஹ்) அவர்கள் தொகுத்துள்ள சிறப்புகள்:-
- 1. சலவாத்து ஓதும் அடியானின் மீது அல்லாஹு தஆலா சலவாத்து சொல்வது.
2..அவனுடைய மலக்குளும் சலவாத்து சொல்வது. - 3.ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் அவரின் மீது சலவாத்துச் சொல்வது.
- 4. சலவாத்து ஓதுபவரின் தவறுகளுக்கு அது பரிகாரமாக ஆவது.
- 5.அவருடைய அமல்களைப் பரிசுத்தப்படுத்துவது.
- .6.அவருடைய அந்தஸ்துகள் உயர்த்தப்படுவது.
,7அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது. - 8அந்த சலவாத்தே அவருக்காக மன்னிப்புத் தேடுவது.
9.சலவாத்து ஓதுபவருடைய செயலேட்டில் ஒரு கீராத் அளவு நன்மை எழுதப்படுவது. ஒரு “கீராத்” என்பது உஹது மலையளவுக்கு சமமானது. - 10.அவருடைய அமல்கள் பெரிய தராசில் நிறுககப்படுவது.
- 11.எவர் தனது சகல துஆக்களையும் சலவாத்தாகவே ஆக்கிக் கொள்வாரோ அவருடைய இம்மை மறுமையில் காரியங்களுக்கு அதுவேபோதுமானதாகஆகிவிடுகிறது.
- 12.அவருடைய குற்றங்கள் அழிக்கப்படுவது.
- 13.அடிமைகளை உரிமை விடுவதை விட அதிகமான நன்மைகள் கிடைப்பது
- 14. சலவாத்தின் காரணமாக ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புக் கிடைப்பது.
15. கியாமத் நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அவருக்கு சாட்சியாக ஆவது. - 16. நபி(ஸல்) அவர்களின் ஷபாஅத் வாஜிபாவது.
- 17. அல்லாஹுதஆலாவுடைய திருப்தியும்கிருபையும்இறங்குவது.
- 18. அவருடைய கோபத்திலிருந்து பாதுகாப்புக் கிடைப்பது.
- 19. கியாமத்து நாளில் அர்ஷின் நிழலை அடைவது.
- 20. அமல்கள் நிறுக்கப்படும்போது நன்மையின் தட்டு கனமாவது.
- 21. ஹவ்லுல் கவ்தர் தடாகத்தில் நீர் அருந்தும் பாக்கியம் கிடைப்பது
- 22. நரக நெருப்பிலிருந்து விடுதலை கிடைப்பது
- 23. கியாமத்து நாளின் தாகத்திலிருந்து பாதுப்புப் பெறுவது.
- 24. சிராத்துல் முஸ்தகீமை எளிதாகக் கடந்துவிடுவது.
- 25. மரணத்திற்கு முனனர் சொர்க்கத்தில் தனது இருப்பிடத்தைக் கண்டுகொள்வது.
- 26. சுவர்க்கத்தில் மிக அதிகமான மனைவியரை பெறுவது
- 27. இருபது தடவைகள் ஜிஹாது செய்வதைவிட அதிகமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வது
- 28. தருமம் செய்ய வசதியற்றவருக்கு தருமத்தின் ஸ்தானத்தில் அது இருப்பது.
- 29. சலவாத்துச் சொல்வது ஜகாத்தாக அமைவது.
- 30. நம்மைப் பரிசுத்தமாக்குவதாக அமைந்திருப்பது.
- 31. அதன் காரணத்தால் பொருளில் பரக்கத்து ஏற்படுவது.
- 32. சலவாத்தின் பரக்கத்தால் நூறு தேவைகளும் இன்னும்
- அதிகமானவையும் நிறைவேற்றித் தரப்படுவது.
- 33. அதுவே ஓர் இபாதத்தாக இருப்து.
- 34. அமல்களில்
எல்லாவற்றையும்விட
விருப்பமானதாக இருப்பது.
அல்லாஹ்வுக்கு - 35. மஜ்லிஸ்களுக்கு அலங்காரமாக இருப்பது.
- 36.வறுமையையும் நெருக்கடியையும் தூரமாக்குவது.
- 37. சலவாத்தின் காரணத்தால் நன்மைக்கு வழி தேடப்படுவது.
- 38.சலவாத்து ஓதுபவர் கியாமத்து நாளில் எல்லோரையும் விட நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நெருங்கி இருப்பது.
- 39. சலவாத்தின் பரக்கத்தால் அதை ஓதுபவரும், அவர் பிள்ளைகளும் அவருடைய பேரக்குழந்தைகளும் பலன்பெறுவது.
- 40. மற்றவருடைய ஈசாலே தவாபுக்காக ஓதும்போது அவரும்
பலன் பெறுவது. - 41. அல்லாஹ்வின்
இன்னும் அவனுடைய தூதரின்
சந்திதானத்தில் நெருக்கம் கிடைப்பது - 42. அது சந்தேகமின்றி ஒளியாக இருக்கிறது
- 43. எதிரிகளை வெல்லக் காரணமாக அமைகிறது.
- 44. மனதை “நிபாக்” என்னும நயவஞ்சகத்தை விட்டும் துருவை விட்டும் சுத்தப்படுத்துகிறது
- 45. மக்களின் மனதில் அன்பை உண்டாக்குகிறது.
- 46. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்
பாதுகாப்பளிக்ககிறது - 47. சலவாத்து ஓதுபரைபற்றி மற்றவர் புறம் பேசுவதை விட்டும் பாதுகாப்பளிக்கிறது.
- 48. சலவாத்து கூறுவது பரக்கத்துகள் மிகுந்த அமல்களில்
- உள்ளதாக இருக்கிறது.
- சிறப்புமிக்க அமலாக இருக்கிறது
ஈருலகிலும் அதிகப் பலன்களை அளிக்கும் அமலாக அமைந்திருக்கிறது
இவையன்றி இன்னும் ஏராளமான நன்மைகள் உள்ளன. நல்ல அமல்களையும அதன் பலன்களையும் திரட்டிக்கொள்ளும் பேராவல் உள்ள விவேகமுள்ளவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டால் மென்மேலும் ஸலவாத்து ஓதிக்கொண்டே இருக்க ஆசைப்படுவார்கள்.
பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்
அல்லாஹும்ம ஸல்லி அலன் நபிய்யில் உம்மிய்யி
அல்லாஹும்ம ஸல்லி அலா நபிய்யினா முஹம்மத்
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸைய்யிதினா முஹம்மதின்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபியிர் ரஹ்மா
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் ஷfபிய்யில் உம்மா
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் நபியித் தாஹிர்
ஸல்லல்லாஹு அலா முஹம்மதிவ் வ ஆலிஹி வஸல்லிம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம மாஹுவ அஹ்லுஹு
ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம
ஜஜல்லாஹு அன்னா ஸைய்யிதினா முஹம்மதின் மா ஹுவ அஹ்லுஹு
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் கமா துஹிப்பு வதர்லா லஹு
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் பிஅததி ஹுஸ்னிஹி வஜமாலிஹி
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் பிகத்ரி ஹுஸ்னிஹி வகமாலிஹி
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வஅலா அபீநா இப்ராஹீம
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அதத மஹ்லூகாத்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யிக வ இப்ராஹீம ஹலீலிக
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஹுவ அஹ்லுஹு
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வ அஹ்லி பைதிஹி வ பாரிக் வஸல்லிம்
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலா முஹம்மதின் அக்ரமி ஹல்கிக
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா சைய்யிதினா முஹம்மதின் பி அன் உஸல்லிய அலைஹி
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அfப்ழல ஸலவாதிக
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வஅலா ஆலிஹி வபாரிக் வஸல்லிம்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் ஷfபீயில் முத்நிபீன்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயீன்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதிவ் வ பாரிக் வஸல்லிம்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதின் அக்ரமி ஹல்கிக
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸைய்யிதினா முஹம்மதிவ் வ ஆலிஹி அல்fப மரத்தின்
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸைய்யிதினா முஹம்மதின் கமா எம்பஙிஸ் ஸலாத அலைஹி
அல்லாஹும்ம யா ரப்ப முஹம்மதிவ் வ ஆலி முஹம்மதின் அஜ்ரி முஹம்மதம் மா ஹுவ அஹ்லுஹு
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதின் கமா அன்த அஹ்லுஹு
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸைய்யிதினா வமவ்லானா முஹம்மதின் fபீ குல்லி வக்திவ் வஹீன்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் பிஅததி குல்லி தாயிவ் வதவாயிவ் வபாரிக் வஸல்லிம்
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலா முஹம்மதின் நபிய்யிக வ ரசூலிக
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸைய்யிதினா முஹம்மதின் அப்திக வரசூலிகன் நபிய்யில் உம்மிய்யி
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதின் அததி மா அஹாத பிஹி இல்முக
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதின் அதத மா அஹாத பிஹி இல்முக
நாற்பது ஸலவாத் அரபி & தமிழில் |





















ஜும்ஆ நாளின் சலவாத்து
ஹஜ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் வாக்கை அறிவிக்கின்றார்கள்: “என் மீது சலவாத்துக் கூறுவது சிராத்துல முஸ்தகீமைக் கடக்கும் போது ஒளியாக இருக்கும், மேலும், எவர் என்மீது ஜும்ஆ நாள்ன்று எண்பது தடவை சலவாத்துச் சொல்வாரோ, அவருடைய எண்பது ஆண்டுகளின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
அல்லாமா ஸகாவீ (ரஹ்) அவர்கள் அல் கல்லுல் பதீ என்னும் கிதாபில் இந்த ஹதீஸை பல அறிவிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்கள். ஹஜ்ரத் அபூ ஹுதரைரா (ரலி) அவர்களால் அறிவிக்கப்ட்ட மற்றொரு ஹதீஸில், “எந்த மனிதர் ஜும்ஆ நாள் அஸருடைய தொழுகைக்குப் பின் தொழுத இடத்தைவிட்டு எழுந்திருக்கும் முன்,
. اَللّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدِهِ النَّبِيِّ الْأُمِّيِّ
وَعَلَى الِهِ وَسَلَّمْ تَسْلِيمًا
அல்லாஹும்ம
ஸல்லி அலா முஹம்மதினின்
னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹீ வசல்லிம் தஸ்லீமா
என்ற சலவாத்தை எண்பது தடவை ஓதுவாரோ அவருடைய எண்பது வருடப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; எண்பது வருட வணக்கத்தின் நன்மைகள் எழுதப்படுகின்றன என
அறிவிக்கப்பட்டுள்ளது..
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை இமார் தாருகுத்னீ (ரஹ்) அவர்கள் ரிவாயத்துச் செய்கிறார்கள்: எவர் ஜும்ஆ நாளில் என்மீது எண்பது தடவை சலவாத்து கூறுவாரோ, அவருக்கு எண்பது ஆண்டுகளின் பாவங்கள் மன்னிக்கப்படு” என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியபோது,” யாரசூலுல்லாஹ்! எவ்வாறு சலவாத்து ஓதவேண்டும்?” என ஒருவர் வினவினார், அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ
وَ نَبِيِّكَ وَرَسُولِكَ النَّبِيِّ الْأُمِّي
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக வநபிய்யிக வரசூலிகன் நபிய்யில் உம்மிய்யி
என
என்று ஓதி ஒரு விரலை மடக்கி கொள்ளவும் பதிலளித்தார்கள். விரலை மடக்கி கொள்ளவும் என்பதின் கருத்து, விரலால் எண்ணிக்கையை கணக்கிடு என்பதாகும்.
ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது : எந்த மனிதர் ஜும்ஆ நாளன்று என்மீது நூறு சலவாத்து ஓதுவாரோ அவருடன் கியாமத்து நாளில் ஓர் ஒளிவரும். அந்த ஒளியை படைப்பினம் அனைத்தின் மீதும் பகிர்ந்தளித்தால் அவைருக்கும் அது போதுமானதா ஆகிவிடும் என ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளினார்கள்..
ஹஜ்ரத் ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் மூலமாக அறிவிக்கப்படுவதாவது: எவர் ஜும்ஆ நாளின் அஸருக்குப்பின்,
اَللّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدِنِ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى الِهِ وَسَلَّمْ
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹீ வசல்லிம்
என்று எண்பது தடவை ஓதுவாரோ அவருடைய எண்பது ஆண்டுகளின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
